technology

img

இந்தியாவில் இன்று அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ33, ஏ73 ஸ்மார்ட்போன்கள்  

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ33, ஏ73 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 

கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், இந்தியாவில் வாரத்திற்கு இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதனடிப்படையில் இன்று சாம்சங் கேலக்ஸி ஏ33, ஏ73 என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஏ33, ஏ73 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் பழைய ஸ்மார்ட்போன்களில் இருந்து சிறிய மேம்படுத்தல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6.4 இன்ச் எஃப்எச்டி+ சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வரும் இந்த டிஸ்ப்ளே, 90Hz ரெப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது. ஆன்ராய்டு 12 அடிப்படையிலான ஒன் யுஐ 4 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்ஸ் வழங்குவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ33 ஸ்மார்ட்போன் விலை ரூ.20,000 முதல் தொடங்கும் என்றும், ஏ73 ஸ்மார்ட்போன் ரூ.30,000க்கும் அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.